உதகை படகு இல்லத்தில் 5 மொழிகளில் தகவல் பலகைகள்

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பாதால் கேரள மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  



பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுற்றுலா பயணிகளுக்காக முதன்முறையாக உதகை படகு இல்லத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, படகு இல்ல நுழைவாயில் பகுதியில் மட்டும் இந்த 5 மொழி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் படகு இல்லத்தில் முக்கிய பகுதிகளை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக படகு இல்ல நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...