முதுமலை புலிகள் காப்பகத்தை அலங்கரித்த ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள்

காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest) பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest)  பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. முதுமலை வனப்பகுதியில் தற்போது வறட்சி துவங்கியுள்ள நிலையில், வன முழுவதும் காய்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில், காய்ந்த வனங்களுக்கு இடையே தீப்பற்றி எரிவது போல அந்தப் பூக்கள் காட்சியளிக்கின்றன. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வனப்பகுதியில் தீ எரிவது போன்ற தோற்றத்தை இந்த பூக்கள் ஏற்படுத்துவதாலே, இதற்கு ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் எனப் பெயர் வந்தது. 

ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்த கூடிய பூ என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தப் பூக்கள் வனப்பகுதியில் பூத்தால் வசந்தகாலம் முடிந்து வறட்சி துவங்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை தாண்டி ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் வறட்சி காலங்களில் பறவைகள் மற்றும் அணில், குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவு அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த மரங்களை சுற்றி ஏராளமான பறவைகளை எந்நேரமும் காண முடிகின்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...