''இடஒதுக்கீடு ரத்தானால் கிராமப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத சூழல் உருவாகும்“

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

கோவை : அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.



இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என உருவாகும்பட்சத்தில், அவர்களுக்கான பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக அவசர சட்டத்தை அனுப்பியிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். 

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தவிர்ப்பு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை இதுபோன்ற மருத்துவர்களால் தான் மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இதுவெறும் அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கின்ற விஷயம் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்டய மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...