ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்டம் மாற்றத்திற்கு தி.மு.க., எதிர்ப்பு

ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது.

கோவை: ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது. 

கோவையில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் வரைபடத்தை மாற்றிக் கட்ட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டு வருகின்றது. இதுதொடர்பாக, கோவை பீளமேட்டில் தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாலக்காட்டிலிருந்து, ஆத்துப்பாலம், ஒப்பணக்காரவீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 121 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆத்துப்பாலத்திலிருந்து கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது, கரும்புக்கடை பகுதியிலிருந்து கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால், மக்களுக்குப் பயன்பெறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் 3 அடுக்கு மேம்பாலமாக திட்டமிட்டிருந்ததை, 2 அடுக்கு மேம்பாலமாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது, அந்த மேம்பாலம் பொதுமக்களுக்கு பயன்பெறாமல் உள்ளது. இதேபோல, கோவையில் பல்வேறு மேம்பாலங்கள் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம், போத்தனூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்கள் கிடப்பில் போடப்பட்டும், ஆமை வேகத்தில் நடந்தும் வருகின்றது. இந்நிலையில், மக்களுக்குப் பயனற்ற நிலையில், ஆத்துப்பாலம் மேம்பாலத்தைக் கட்டினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.'' இவ்வாறு கூறினார். 

மேலும், மாற்றியமைக்கப்பட்ட ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்ட வரைபடத்தையும் செய்தியாளர்களிடம் அவர் காண்பித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...