'பாரதியார் பல்கலைக்கழக லஞ்ச விவகாரம் கடந்தாண்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது'

பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடமாக இருக்கும் துணைவேந்தர் பணியிடத்திற்கு உயர்கல்வி துறை செயலாளர் மூலம் குழு அமைக்கப்பட்டு எவ்வித குறைகளுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடந்திருக்கிறது என்பது தவறான தகவலாகும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் வந்ததாலேயே, அதனை ஆய்வு செய்ய முன்கூட்டியே குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. 

உயர்கல்வி துறையை பொருத்தவரை மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அளவில் 25.2 என உள்ளது. தமிழகத்தில் 46.9 சதவீதமாக மாணவர்களின் சேர்க்கை மாறியுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...