”அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல”

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், ''இரட்டை இலைச் சின்னம், தலைமை கழகம் கிடைப்பதற்காகவும், 1 1/2 கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் அ.தி.மு.க., இணையப் பாடுபட்டோம். மேலும், பிரதமரை சந்தித்து ஆலோசனை கேட்டதில் கழகம் பிரியக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இணையக் கூறினார். அதன்படி, இணைந்தோம். தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார். மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எந்த நிலையை எடுத்தாரோ, அதே நிலையை நாங்கள் கடைபிடிக்கிறோம். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தினை முடிவு செய்யும் நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆளும் கட்சிதான் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியும். காவிரி நீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, உண்ணாவிரதம் இருந்து நல்ல  தீர்ப்பினை பெற்று தந்ததோடு இல்லாமல், காவிரி ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்தார். சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி கருத்துக் கூற முடியாது.'' இவ்வாறு கூறினார்,

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...