பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - தா.பாண்டியன்

காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை : காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டல மாநாடு, கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  

மார்ச் இறுதியில் மாநில மாநாடும், ஏப்ரலில் அகில இந்திய மாநாடும் நடத்த உள்ளோம். அதில் அரசியல் தீர்மானங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறைகூற விரும்பவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாகவே 3 மாதங்களில் காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டதை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டது. இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமா? என்று தெரியவில்லை. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,மேல் முறையீடு செய்வேன் என கர்நாடக  முதல்வர் கூறி உள்ள நிலையில், மேல் முறையிடு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற கூறியது வெறும் கருத்துரையா அல்லது கண்டிப்பான தீர்ப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் நதி நீர் பங்கீட்டை கணினி மூலமாக  தீர்மானிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மாநிலத்திற்கு ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணிக்கு மட்டும் ஒருவர் நியமித்தால் போதுமனது 

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...