காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை திசைதிருப்ப முயற்சி: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ், வங்கி மோசடி குறித்து மத்திய அரசைக் குறை சொல்கிறது. அக்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி செய்கிறது. உண்மையில். நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் தான். மோசடியில் தொடர்புடைய கீதாஞ்சலி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் பங்குச்சந்தை நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்.,13-ல் அந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு, 2 நாட்கள் கழித்து செப்.,15ல் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக கடன் வழங்க அலகாபாத் வங்கிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்புகளை இணைத்து பாருங்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம். சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார். 

குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தும், காங்கிரஸ் கட்சி தைரியமாகப் பா.ஜ.க., மீது குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் செய்த குழப்பங்களை மத்திய அரசு சரி செய்து வருகிறது. நிரவ் மோடி மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்ததும், அவரைப் பிடிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால், அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...