இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியின் வயிற்றில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.