திரைப்பட பாணியில் வயிற்றில் ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பதுக்கி வந்த வாலிபர் கைது

இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியின் வயிற்றில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. 



இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 



நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...