நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை போலீஸார் ஏற்படுத்தினர்.
குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் கேத்தி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா அறிவுரையின்படி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் போலீஸார் ஈடுபட்டனர்.
உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில், கேத்தி காவல் துணை ஆய்வாளர்கள் சிக்கந்தர் மற்றும் ஷர்புத்தீன் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமீறல் குறித்து விளக்கினார்கள். அதிவேகமாக பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் ஆகியவை செய்தால் அந்த வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் கேத்தி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா அறிவுரையின்படி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் போலீஸார் ஈடுபட்டனர்.
உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில், கேத்தி காவல் துணை ஆய்வாளர்கள் சிக்கந்தர் மற்றும் ஷர்புத்தீன் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமீறல் குறித்து விளக்கினார்கள். அதிவேகமாக பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் ஆகியவை செய்தால் அந்த வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.