கோவையில் இருந்து திருச்சிக்கு மாறுகிறது மத்திய கலால்துறை அலுவலகம்

கடந்த 55 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த மத்திய கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த 1962 -ம் ஆண்டு முதல் கோவையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஜி.எஸ்.டி வரி மற்றும் சுங்கத்துறையும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 31-ம் தேதி வரை கோவையில் செயல்படும், மத்திய அரசின் கலால்துறை அலுவலகம், நவம்பர் 1-ம் தேதி முதல் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.  எஞ்சிய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் கோவையிலேயே செயல்பட உள்ளது. 

இது தொடர்பாக, கோவை சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், ”கோவையில் வரும் 31-ம் தேதி வரை மட்டுமே, சுங்கத்துறை அலுவலகம் செயல்படும்.  மத்திய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் தற்போதைய அலுவலகத்திலேயே இயங்கும்.” இவ்வாறு அவர் கூறினார். 

கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...