கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அக்.25 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் அக்டோபர் 25ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்சின்னம்பாளையம், காளியாபுரம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனப்பட்டி, கப்பளாங்கரை, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம், மூலனூர், கிட்டசூரம்பாளையம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மாளபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அக்டோபர் 16 முதல் 25ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி, சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...