கைத்தறி நெசவாளர்கள் புதிய நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தறி நெசவாளர்களுக்கென மகாத் காந்தி புங்கர் பீமா யோஜனா எனும் காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.

சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...