பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் வரும் அக்டோபர் 21ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் தலைமைவகிக்க உள்ளனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். தலைமைக் கழக நடுவராக வழக்கறிஞர் நன்மாறன் செயல்படவுள்ளார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்று வெற்றியடையுமாறு கோவை மாநகர வடக்கு திமுக இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...