இருகூர் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

இருகூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத சுரங்கப் பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சமூக விரோதிகளால் சேதமடைந்து வரும் நூலகத்தினை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இருகூர் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இருகூர் நகரில் பொதுமக்கள் பயன்பெற சுரக்கப்பாலம் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் 4 மாதங்களைக் கடந்தும் தார்சாலை செப்பனிடப்படாததால் சுரங்கப்பாலம் சிதலமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணமே விரயமாகிறது. 

இருகூரில் செயல்பட்டு வரும் நூலகத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது நூலகம் அரசு ஆரம்பப் பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் நூலகம் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இருகூர் பேரூராட்சியில் 2வது அத்திக்கடவு குடிநீர் திட்டம் நிறைவடைந்து தட்டுப்பாடு இல்லை. ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புதிய குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

எனவே கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...