சுற்றுச்சூழலை தூய்மையாக்க வலியுறுத்தி சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்



கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி ஏரியை தூய்மையாக்க வலியுறுத்தி இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் சார்பில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் பணி தொடங்கியது. 



செல்வபுரம் பகுதியில் வனப்பாதுகாப்பு, நீர்ப்பாசனம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், தூய்மை, கழிப்பறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுவர்களில் ஓவியம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தும் பணியில் ஏராளமான சுற்றுச்சூழல் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். 



இது குறித்து இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் சஞ்சய் பிரசாத் பேசுகையில், எங்களது இந்த முயற்சியின் மூலம்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நாம் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். காலியாக இருக்கும் சுவர்களில் தூய்மை குறித்து வாசகங்கள் மற்றும் படங்களை வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...