எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம் சார்பில் விற்பனையாளர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், கோவை மற்றும் குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை இணைந்து ஒரு நாள் விற்பனையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11ம் தேதியன்று குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட்-யில் நடைபெறவுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர்க்கான இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கை-2012 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இக்கொள்கையின் மூலம் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது ஆண்டு மொத்த கொள்முதலில் 20 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அந்நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதன் உள் ஒதுக்கீடு, அதாவது 20 விழுக்காட்டில் 4 விழுக்காடானது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அவை வழங்கும் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் குன்னூர் பேஸ்டர் நிறுவனம் மற்றும் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கான புதிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை அடையாளம் காணும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எஸ், எஸ்டி தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...