அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை- தமிழிசை சௌந்தராஜன் கேள்வி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து கடைநிலை ஊழியர் நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்த வேண்டும். தற்போதைய டெங்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது தான் காரணம். 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பரோல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றதா என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி முறையாக செயல்படவில்லை.

கெயில் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது திமுக. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக தற்பொது ஒரு நிலைப்பாடும் திமுக எடுக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை ?.

கீழடி அகழ்வாராய்சி அனாவசியமாக அரசியல் ஆக்கப்படுகின்றது. அகழ்வாராச்சிக்கு பின்னர் மண் போட்டு மூடுவது இயல்பான நடைமுறை. 

பாஜக ஆட்சியில் 12.5 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

அமித்ஷா மகன் ஜெய் மீதான குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டு உள்ளது. பாஜக தேசியச் செயலாளர் அமித்ஷாவின் மகன் ஜெய் ப.சிதம்பரம் மகனை போல இல்லை. முறையாக அனைத்து  வரிகளும் கட்டி இருக்கின்றார்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...