செயற்கை பஞ்சு நூலின் மீதான வரியினை குறைத்துள்ளது ஜவுளித்துறைக்கு பயனளிக்கும்- சைமா

செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீது 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் துணிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளீட்டு வரி எடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செயற்கை பஞ்சு மற்றும் நூல் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, செயற்கை பஞ்சு நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சைமா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே, தற்போது செயற்கை பஞ்சு நூலின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு சைமா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக செயற்கை நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது 22-வது கூட்டத்தில் அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உலகளவில் நமது ஜவுளி உற்பத்தி பொருட்கள் போட்டியிட வசதி செய்யும். மேலும், ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் துணி கிடைக்கும் என்று சைமா தலைவர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...