பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி-யில் இணைக்க வலியுறுத்தி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன.

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுதல், பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாட்கள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 65 சதவிகித லாரிகள் பங்கேற்றுள்ளதாகவும், இயந்திர உதிரி பாகங்கள், உற்பத்தி பொருட்கள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் கோவை மாவட்டத்தில் தேக்கமடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...