நீலகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் துவக்கம்


நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.

வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் இன்று (அக்டோபர் 8) மற்றும் அக்டோபர் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மேற்பார்வையிட சமூக பாதுகாப்பு ஆணையர் லால்வேனா அவர்களை நீலகிரி மாவட்ட தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.



இம்முகாம்களில் நீலகிரிக்கு உட்பட்ட வாக்காளர்கள் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



இதனைத்தொடர்ந்து, இன்று (அக்டோபர் 8) குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜே.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...