ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனை சார்பில் இரத்ததானம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தன்னார்வ இரத்ததானம் தினம் அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையின் ட்ரான்ஸ்ப்யூஷனால் மெடிசின் துறை சார்பில் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள், இரத்த கொடையாளர்கள், ஒற்றை தானம் ப்ளேட்லெட் கொடையாளர்கள், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் இரத்த வங்கிக்கான அயராது பணியாற்றிய ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தியது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த பாராட்டு விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி வி.ராமகிருஷ்ணா தலைமை விருந்தினராக பங்கேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், மருத்துவர் சுகுமாரன், மருத்துவ தலைவர் ஐசக் கிரிஸ்டியன் மோசஸ் மருத்துவ இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட இரத்த தானம் அமைப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இரத்ததானம் அதிகமாக செய்த அருள் கோகுல் தாஸ், கலந்துகோண்டு நன்கொடை மற்றும் இரத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமை குறித்து பேசினார். 

நோய்தடுப்பு இரத்தவியல் & ட்ரான்ஸ்ப்யூஷனால் மருத்துவ ஆலோசகர் ஸ்ரீதர் கோபால் பேசுகையில், மாணவர்கள் ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை தன்னார்வ ரத்த தான ஊக்குவிப்பதில் இரத்த கொடை அமைப்பாளர் பங்கேற்போடு, இரத்த தானம் குறித்து எண்ணங்கள் பகிர்வு, முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தானம் ப்ளேட்லெட் தேவை. பிளாஸ்மா பரிமாற்றம் (TSA), மற்றும் மருத்துவமனையில் இரத்த தேவையை வலியுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் எதிர்வரும் தேவைகளுக்கு இரத்த நன்கொடை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...