சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தை போலவே, சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கைவிடப்பட்டது. 

பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது சி.பி.எஸ்.இ. கல்வியின் தரத்தை பாதிக்கும் என்றும், நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியளர்களிடம் பேசுகையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பு பயில வேண்டும்.  தோல்வியடையும் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள இது போன்ற திட்டங்களுக்கு 25 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...