மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இளைஞரின் நீண்டதூர இருசக்கரவாகன பிரச்சாரம்

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. 

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சினான் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நீண்ட தூர இருசக்கர வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய அவர், அண்டை நாடுகளான  பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் என மொத்தம் 16,000 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.



கடந்த ஜுலை 30-ம் தேதி தொடங்கிய இந்த வாகனப் பிரச்சாரமானது, செப்டம்பர் 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளின் அத்தியாவசிய தேவையை வலியுறுத்தி வாகனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட சினான் கோவைக்கு வந்தார். அவருக்கு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். 

இவரது பயணம் குறித்து, கோவை மாற்றுத்திறனாளி அமைப்பினை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இவரது இந்த நீண்ட தூர வாகனப் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாநில மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு உதவியது. மாற்றுத் திறனாளிகளினாலும் எந்த இடையூறுமின்றி வாகனம் ஓட்ட முடியும் என்பதை, சினான் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...