மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று ஏர்.ஆர். ரகுமான் பாடல் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” (The flying lotus) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த பாடல் 19 நிமிடங்கள் அடங்கியது. 

இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு ஏ.ஆர். ரகுமான் பேட்டியளிக்கையில், ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” மக்களிடையே எழுச்சியை உண்டாக்கும். நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை விளக்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பாடலின் வரிகளை எழுத்தாளர்கள் விஜய், சிதா வாஷி, பாரூல், கேரி ஹவுலகான், விஸ்வா, வந்தனா பிரசாத், நோரீன், கபீர் சஹானி மற்றும் சத்யா, ராவ் ரமலா ஆகியோர் எழுதியுள்ளனர். 

பாடலில் உணர்ச்சிகளை வெளிக் கொண்டும் வரும் விதமாக, பிரதமர் மோடியின் சிறிய உரை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா வர்த்தகம், தன்தனாதன் திட்டங்கள் பற்றிய வரிகள் இடம் பெற்றுள்ளன. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...