நீலகிரியில் டெங்கு பரவாமல் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் விநியோகம்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா டெங்கு பரவாமல் பாதுகாக்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்று குன்னூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார் தலைமையில் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், சுற்றுலா சிற்றுந்து வாகன ஓட்டுனர்கள், வியாபரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழக செயலாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முகமது சலீம், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்றம் குன்னூர் தலைவர் ஜெபரத்தினம், அரசு மருத்துவர் ஷீலா, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...