பழ மரச் சாகுபடியாளர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை

சமீபகாலமாக பழமரச் சாகுபடியாளர்கள் சாகுபடி செய்யும் கொய்யா, மாதுளை, எலுமிச்சைப் பயிர்களில் மறைந்திருந்து தாக்கும் எதிரியான நூற்புழுக்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தாக்குதலின் ஊற்றுக்கண் சாகுபடியாளர்கள் வாங்கும் நாற்றுக்களின் மூலமே இந்த எதிரிகள் தோட்டத்தில் எளிதில் உட்புகுகின்றன. எனவே இந்த நூற்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

பழமர நாற்றுக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோதான் பெறப்படுகின்றன. பெரும்பாலும் விவசாயிகள் நேரில் சென்று பழமர நாற்றுக்களை வாங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ தான் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது. அவர்களுக்கு நாற்றுக்கள் மூலம் புதிய பகுதிகளுக்குக் கடத்தப்படும் நூற்புழுக்கள் பற்றிய தெளிவு இல்லை, இருந்தாலும் அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.



விவசாயிகளும் இதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. நூற்புழு தாக்கிய நாற்றுக்களை நட்டு அவை சில வருடங்கள் கழித்துப் பெரிய பாதிப்பையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்தும் போதுதான் விழிப்படைகின்றனர். இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகும். வருமுன்னர்க் காத்தல் என்னும் தாரக மந்திரம் நமது உடல் நோய்களுக்கு மட்டுமின்றி வேளாண் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.

எனவே உழவர் பெருமக்கள் நாற்றுக்களை வாங்கும்போது நேரில் சென்று ஓரிரு நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களில் சிறிய வேர்முடிச்சுகள் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் நாற்றுக்களை வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



மேற்கண்ட தகவலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...