கோவை, ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராஜஸ்தானி சங்கம் சார்பில் கோவையில் ராஜஸ்தானி எரியூட்டு மையம் அமைக்கவும், பசுக்களை பாதுகாக்கவும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (அக்.,7) மாலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ராஜஸ்தானி சங்கம் நடத்துகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "கோசாலா"வுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது.

இது குறித்து கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஸ்வா அன் தேவ்ஜி டைமன்ட்ஸ் விஸ்வநாதன் மற்றும் ராஜஸ்தானி சங்க செயலாளர் பன்சி சங் சவ்கான் ஆகியோர் கூறியதாவது:-
"இளம் நடன கலைஞர்களை உருவாக்கி வரும் ராஜ் அட்ரோஜா டான்ஸ் ஸ்டுடியோ இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. நல்ல காரணங்களுக்கான நடனத்தை ராஜ் அட்ரோஜா இந்த நிகழ்ச்சியின் மூலம் துவக்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோசாலாவுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது" என்றனர்.