ராஜா கழுகுகளின் வரவால் அழகு கூடும் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிராமம் பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் உள்ளது. இதனையொட்டி, கோவை வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்கின்றன. 

தற்போது, பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தின் ஜுரோ பாயிண்ட் பகுதியில் சிவப்பு நிற தலையை கொண்ட ராஜா கழுகுகள் வருகை தந்துள்ளன. அதனை, பொதுப்பணித்துறையின் உதவி நிர்வாக பொறியாளர் நிதியன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ராஜா கழுகுகள், இறந்த மானின் உடலை  தின்று கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. 

கழுகுகளின் வருகையால் வளமான வனப்பகுதியை குறிக்கும் என்ற நிலையில், சுற்றுவட்டாரப்பகுதியான சத்தியமங்கலத்தின் மோயர் பள்ளத்தாக்கு, புலிகள் சரணாலயம் மற்றும் பிற பகுதிகளிலும் இவைகள் பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் இல்லாத இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வரத்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தில் தண்ணீரின் அளவால் இயற்கை எழிலகு பொழிந்து காணப்படும் வேளையில், வன விலங்குகளின் வருகையும் அதிகரிக்கிறது. ஏற்கனவே, யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, மற்றும் செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வந்த வண்ணம் உள்ளன. 

பல்வேறு விலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் ராஜா கழுகுகளும் முகாமிட்டுள்ளதால்,  பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் பகுதியை விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...