சிக்குன்குனியா நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு



சிக்குன்குனியா காய்ச்சலும் நுண்ணியிரிகளினால் பரவும் நோயாகும். நுண்ணியிர்கள் தொற்றிய ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரப்பப்படுகிறது. நுண்ணுயிரிகளைக் கொண்ட கொசுக்கள் கடிக்கும்போது மனிதனுக்கு இந்நோய் உண்டாகிறது. அறிகுறிகள், உடலில் காணப்படும் மாற்றங்கள், ஆய்வகச் சோதனை, பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் சிக்குன்குனியா காய்ச்சல் கண்டறியப்படுகிறது. 

சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியா நோயை குணப்படுத்துவதற்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், பைப்பராஜென் என்ற மருந்தில் இருந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய உயிர்தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷெய்லி தோமர் பேசுகையில், ஆண்டுதோறும் சிக்குன்குனியா நோயால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டே நோய்ப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், சிக்குன்குனியா நோயை குணப்படுத்த பைப்பராஜென் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இந்த பைப்பராஜென் மருந்தானது, மனிதர்களின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த மருந்தை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக,  மருந்தின் மூலக்கூறுகளை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...