உடலை பலப்படுத்துவதற்காக, உயிரைப் பாதுகாக்க தவறும் நடைபயிற்சி செய்யும் மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலைமாவட்டமான நீலகிரிக்கு மேட்டுப்பாளையத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரி மற்றும் பர்லியாறு வழியாக என இரு சாலைகளில் உதகை செல்ல முடியும். இந்த இரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மிகுந்து காணப்படும். குறிப்பாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் அடிக்கடி யானை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலையில் உலா வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மிருகங்கள் நடமாடும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி வனப்பகுதிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால், மக்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் சோதனை சாவடியில் இருந்து 5 கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் நடந்து செல்ல மேட்டுப்பாளையம் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி செய்வது ஆபத்தானது என்பதை மக்கள் உணர்வதில்லை. அவ்வாறு தடையை மீறுபவர்களை கண்டிக்கவோ, எச்சரிக்கை விடுக்கவோ வனத்துறை அதிகாரிகள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் செல்லும் மக்களோ அல்லது விலங்குகளுக்கோ எந்த உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால், இதே நிலை தொடரும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

உயிரை பாதுகாத்துக் கொள்ள மறந்துவிட்டு, உடலை பலப்படுத்தும் மக்களிடையே, வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...