கோவை மாநகராட்சியின் புதிய வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் திமுக-வினர் மனு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை மற்றும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிச்சி பிரபாகரன் தலைமையில் குறிச்சி பகுதி திமுக-வினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.

குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...