கோவை, தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள மரத்தில் கடந்த மூன்று நாள்களாக சிக்கிக் கொண்டிருந்த பூனையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில், பூனை ஒன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஏறியது. ஆனால், மரம் உயரமாக இருப்பதால், பூனையால் கீழே இறங்க முடியவில்லை. தபால் ஊழியர்கள் சிலரும் பூனையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் பூனையை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் என்பவர் நமக்கு கொடுத்த தகவலின் பேரில் நாம் தலைமை தபால் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு மரத்தில் இருந்து இறங்க முடியாமல் பூனை தவித்து வந்தது.  இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை தீயணைப்பு துறை அலுவலர் பிரதீப் குமாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஸ்டேஷன் ஆஃபிஸர் அண்ணாதுரை தலைமையில் சிவகுமார், தேவராஜ், ஜெயச்சந்திரன், சிவகுமார், தங்கபாண்டி, ஶ்ரீதரன், விபின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏணி, குச்சி உள்ளிட்ட உபகரணங்களுடன் அவர்கள் பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், பூனை சிக்கவில்லை. மரக்கிளையில் அங்கும், இங்கும் பூனை தாவியது. அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு பூனை மீட்கப்பட்டது. பூனையை பிடிப்பதற்காக, கீழே பெட்சிட்டை விரித்து தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். ஆனால், பூனை பெட்சிட்டில்வ விழுகாமல், கீழே விழுந்து நொடிப்பொழுதில் அந்த இடத்தை விட்டு ஓடியது. பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...