ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கிடங்கினால் செல்லுப் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.
இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.
எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.
இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.
எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.