வால்பாறை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிகளை சேதம் செய்த காட்டு யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்த நல்லமுடி எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் முகாம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் அங்கு அமைந்துள்ள ரேசன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சென்ற யானைக் கூட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான உரக்கிடங்கின் சுவற்றை உடைத்து அங்கிருந்த உர மூட்டைகளை சேதப்படுத்தியது.

மேலும், தாய்முடி டிவிசன் பகுதியில் சின்னதுறை என்பவரது வீட்டின் சுவற்றையும் உடைத்தது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அருகில் இருந்த நல்லமுடி வனப்பகுதிக்குள் யானைகள் தஞ்சமடைந்தன. இதனால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்து வருகின்றனர்.

இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மதி என்பவரின் கடை கதவினையும், அருகாமையில் இருந்த கணேசன், ராஜன், தர்மலிங்கம் ஆகியோரின் வீட்டின் ஜன்னல், கதவினையும் உடைத்து சேதப்படுத்தியது. 

இதுகுறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினரின் முகாம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...