வால்பாறை அடுத்த நல்லமுடி எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் முகாம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் அங்கு அமைந்துள்ள ரேசன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சென்ற யானைக் கூட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான உரக்கிடங்கின் சுவற்றை உடைத்து அங்கிருந்த உர மூட்டைகளை சேதப்படுத்தியது.
மேலும், தாய்முடி டிவிசன் பகுதியில் சின்னதுறை என்பவரது வீட்டின் சுவற்றையும் உடைத்தது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அருகில் இருந்த நல்லமுடி வனப்பகுதிக்குள் யானைகள் தஞ்சமடைந்தன. இதனால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்து வருகின்றனர்.
இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மதி என்பவரின் கடை கதவினையும், அருகாமையில் இருந்த கணேசன், ராஜன், தர்மலிங்கம் ஆகியோரின் வீட்டின் ஜன்னல், கதவினையும் உடைத்து சேதப்படுத்தியது.
இதுகுறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினரின் முகாம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சென்ற யானைக் கூட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான உரக்கிடங்கின் சுவற்றை உடைத்து அங்கிருந்த உர மூட்டைகளை சேதப்படுத்தியது.
மேலும், தாய்முடி டிவிசன் பகுதியில் சின்னதுறை என்பவரது வீட்டின் சுவற்றையும் உடைத்தது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அருகில் இருந்த நல்லமுடி வனப்பகுதிக்குள் யானைகள் தஞ்சமடைந்தன. இதனால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்து வருகின்றனர்.
இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மதி என்பவரின் கடை கதவினையும், அருகாமையில் இருந்த கணேசன், ராஜன், தர்மலிங்கம் ஆகியோரின் வீட்டின் ஜன்னல், கதவினையும் உடைத்து சேதப்படுத்தியது.
இதுகுறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினரின் முகாம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.