கோவையில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் மகாத்மாக காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக தணிக்கை மேள்கொள்வது குறித்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...