டெங்கு மண்டலமாகும் கொங்கு மண்டலம்- கோவையில் ஒரேநாளில் இருவர் பலி


கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் டெங்கு குறித்தான அரசின் நடவடிக்கை மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்தி முண்டா (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவைக்கு மில் வேலைக்காக வந்தார். 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முக்தி முண்டா-விற்கு மஞ்சள் காமாலை இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முக்தி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, சிறுமுகை இரும்புப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காவேரி (25) கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு குறித்தான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கோவையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...