கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து : மாநகர காவல்துறை அறிவிப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல்,  சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும்.  உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...