மதுபானக் கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் மது போதையால் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மதுக்கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் மது குடித்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடைக்கு ஆதரவாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் செவ்வாய்க்கிழமையன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுக்கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு அளவிற்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், மதுக்கடை வேண்டும் என ஆளும் கட்சியினர் குடிமகன்களை திரட்டி போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மது வழங்கினர். அவர்கள் அளித்த இலவச மதுவால் தான் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்றனர்.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கிராமத்தில் மது குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...