கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் - மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தமப்பதி ஊராட்சியில் “ஸ்வச்ச ஃபக்வாடா” என்ற கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பார்த்தீனிய செடிகளை அகற்றியும், துப்புறவு பணிகளை மேற்கொண்டும் கிராமவளம் மற்றும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, கோவை மாவட்டம் “ஸ்வச்ச ஃபக்வாடா” எனும் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்டு வரும் 15 -ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும்; கிராமவளம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 இவ்வியக்கத்தின் நோக்கம், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல், அனைத்து கிராம ஊராட்சிகளையும் தன்னிறைவு அடைய செய்தல், பொது இடங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரித்தல் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே தெரிவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இச்சிறப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும், அரசுடன் இணைந்து தங்களது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திட உதவிடுமாறும், தங்களால் இயன்ற அளிவிலான மரக்கன்றுகளை நடவு செய்து நமது கிராம பசுமையாக மாற்றிட உதவிடுமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொண்டு, இத்திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, கிராமப்புறங்களை திறந்த வெளி கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றவும், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவதன் அவசியத்தினை குறும்படங்கள் மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மின்னனு விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் .ஹரிஹரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், வீ.பத்மாவதி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .அ.ரவிச்சந்திரன், பணிமேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...