சேலத்தில் "ஸ்வச்ச ஹி சேவா" தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிய தென்னிந்திய ரயில்வே


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக நேற்று (02.10.2017) காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.



தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தெற்கு ரயில்வேத்துறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர வங்கிகள், காவிரியோர ரயில்நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. 



இதனிடையே, காவரி ஆற்றுப்படுகையில் தூய்மைப் பணியை சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடங்கி வைத்தார். இதில், சேலம் ரயில்வே ஊழியர்கள்,  கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இதனை ஈரோடு மாவட்ட எம்.பி. எஸ். செல்வக்குமார சின்னையன் ஆய்வு செய்து, தூய்மைப்படுத்தும் பணிகுறித்து சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிடம் கேட்டறிந்தார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...