புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது - புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் கோவையில் பேட்டி



புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பல்கலைக் கழக அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பல்கலைக் கழகம் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பல்கலைக் கழக வேந்தர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் கிளை கோவையில் துவங்கப்படுகிறது என்றார்.



இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் மீது துணை நிலை ஆளுநரின் தலையீடு எங்களுக்கு நெருடளாக உள்ளது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் இது போன்று இல்லை. சில கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார். 



ஆளுநர் சொல்வது போல புதுவையில் டெங்கு தீவிரமாக பரவவில்லை. டெங்கு பரவுவது கட்டுக்குள் உள்ளது. டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி அமைத்துள்ளார்.

இவ்வாறு புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...