அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : கேரள மருத்துவமனைகளால் புறக்கணிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

தொடர்ந்து, வேலாயுதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதனிடையே, இன்று ராஜேந்திரனுக்கு கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சிகிச்சை அளிக்க மறுத்த கேரள அரசு மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

இது குறித்து ராஜேந்திரனின் மகன் ராகவன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், 'என் தந்தைக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை அளிக்க தாமதமானதால் என் தந்தையின் காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

எங்கள் மொத்த குடும்பமும் தந்தையின் வருமானத்தை நம்பியே உள்ளது. எனது தந்தையின் கால் பறிபோனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்கள் படிப்பும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்ட கேரள மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...