தொடர்விடுமுறையால் வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் விழாக்கால தொடர்விடுமுறையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.



இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...