காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைகட்டும் டாஸ்மாக் கடைகள்..!


கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினமான இன்று மூட உத்தரவிடப்பட்டது.

விதிமுறைகளுக்கு முரணாக இன்று மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்திருந்தார். ஆனால், கோவையின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இன்று வெளிப்படையாகவே மது விற்பனை நடப்பதை பார்க்க முடிகிறது.



மேட்டுப்பாளையம் சாலையின் அருகில் அமைந்துள்ள சங்கனூர் சாலை, கண்ணப்பன் நகரில் நான்கு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இந்த கடைகள் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. குறிப்பாக சாதாரண நாட்களில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இன்று காந்தி ஜெயந்தி தினத்தின் சிறப்பு விற்பனையாக காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடந்துவருவதாக அங்குள்ள பொதுமக்கள் புகாரளித்தனர்.

மேலும், இவர்களை தண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், காலையிலேயே வந்து மாமூல் வாங்கிவிட்டு, மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

விசாரித்ததில், அரசு நிர்ணய விலையை விட அதிக விலையில் இன்று மது பாட்டில்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அரசு உத்தரவை மதிக்காத டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...