கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் நீர்நிலைகள் அருகே பனை விதை நடும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தற்போது, பசுமையை மீட்டுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முந்தைய களப்பணியில் போது விதைப் பந்துகள் வீசும் பணி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 34-வது தொடர் களப்பணியில் பனை விதை நடும் ஆறாவது வார களப்பணி இன்று நடைபெற்றது. பேரூர் அருகே உள்ள கங்கநாராயணசமுத்திரம் மற்றும் சொட்டையாண்டி குட்டை ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த களப்பணியின் போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பனை விதை நடும் களப்பணியில் ஈடுபட்டனர். இந்த களப்பணியின் போது 800 பனை விதைகள் நடப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 2ம் தேதியன்று (நாளை) காலை 7 முதல் 11 மணிவரை முத்தண்ணன் குளம் என்ற குமாரசாமி குளத்தில் களப்பணி நடைபெறும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...