கோவையில் நடைபெற்ற வோடஃபோன் மாரத்தான் 2017 போட்டியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


கோயம்புத்தூர் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் தடகள சங்கம், ஆகியவற்றுடன் வோடாபோன் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக வோடாபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் 21.1 கிமீ ஓட்டம், 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம் மற்றும் நடை என்ற மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதில் மொத்தம் 2.5 லட்சம் என்ற தொகைக்கும் அதிகமான ரொக்கப் பரிசுத் தொகையானது, வழங்கப்படுகின்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, முதலாம் போட்டியான 21.1 கி.மீ (அரை மாரத்தான்) பந்தயத்தை காலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன், நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கொடியசைத்து துவக்கிவைத்தார்.



இதில் 2000 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெல்லிங்டனை சேர்ந்த ஆர். பத்மநாபன், 01.10.33 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பெற்றார். இரண்டாமிடத்தை ஜி.என். வினோத் 01.11.06 நிமிடங்களில் வந்தாடைந்தார். மூன்றாமிடத்தை டி. நிகில் 01.12.02 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார்.



பெண்கள் பிரிவில் வசந்தா மணி 01.29.45 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். கே. சுகுணா 01.30.39 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். வி.சோனியா 01.36.00 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் முகமது இட்ரிஸ் 01.24.01 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். போஸ்கோ 01.32.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். நஞ்சுன்டன் 01.34.36 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் மீனாட்சி சங்கர் 02.05.35 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ஊர்மிளா சுரானா 02.11.31 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து ரக்ஷனா பட்டேல் 02.24.04 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



இரண்டாம் போட்டியான 10 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 6.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் தமிழ்நாடு துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்), மணிஷ் சிங்கால் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 4,700 பேர் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் பி.கிரண் 00.31.52 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், எம். ராஜ்குமார் 00.32.00 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், சுரேஷ்குமார் 00.32.33 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.

பெண்கள் பிரிவில் பானுப்பிரியா 00.44.48 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், திவ்ய லட்சுமி 00.45.51 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 00.46.59 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் டி.எம்.நாராயணன் 00.43.43 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், பி. பாண்டுரங்கன் 00.43.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ஜெயகுமார் 00.44.29 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் ஆர்.லட்சுமி 00.49.28 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், கே.ஆர்.தீபா 01.08.50 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், கீதா பாலு 01.09.21 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



மூன்றாம் போட்டியான 5 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 7.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் கோயம்புத்தூர், மண்டல தலைவர், நவீன் சந்தரன் நாயர்   கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 7,100 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...