தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நேற்று (27.09.2017) மாலை 4.00 மணிக்கு வடகோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் வெ. நா. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். பின்னர், செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதில், வருகின்ற (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பீளமேடு விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பினை அளிப்பதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று வரவேற்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 16 ம் தேதி அன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று லட்சக்கணக்கிலே கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து கழகம் வலுப்பெறுவதற்கு முனைப்புடன் செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மக்களை பாதிக்கின்ற வகையில் அறிவித்திருக்கின்ற புதிய வரி விதிப்பு , குப்பைகளுக்கு வரி , குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள், அனைத்திலும் சிறப்பாக பங்கேற்ற மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிங்கை ஆர்.ரவிச்சந்திரன், சாந்தி , தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், கதிர்வேல்சாமி, உமா மகேஸ்வரி, பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம். சுந்தரம், சா.மாணிக்கம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் இளஞ்சேரன், தளபதி இளங்கோ, பையாக்கவுண்டர், முருகேசன், மாலதி நாகராஜன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...