வால்பாறை ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஐயப்பசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் ஐயப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்றைய தினம் கோலாகலமாக துவங்கியது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.



அதனை தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் பிரம்மகலசாபிஷேக கும்பாபிஷேகம் சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வந்த புனிதத்தீர்த்தங்களுடன் நடைபெற்றது.



வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவைத் தொடர்ந்து 41 நாள் மண்டலபூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகளும், திருவிழா கமிட்டிகளும் செய்து வருகின்றனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...